யாழில் பூரணை விடுமுறை தினத்தில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

பூரணை விடுமுறை தினமான திங்கட்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மதுபான போத்தல்களில் 15 முழு போத்தல்களும் 165 கால் போத்தல்களும் 72 பியர் போத்தல்களும் கைப்பற்றஒப்பட்டுள்ளது.