ஓடும் தொடருந்து இயந்திரத்தில் தீ விபத்து

பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரம் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் 20ஆம் திகதி திங்கட்கிழமை மாலை எந்தேரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் எஞ்சின் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிந்த ரயிலின் எஞ்சின், வேறு எஞ்சின் மூலம் மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட ரயிலை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனால், பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.