மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமித்புர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து, 08 கிராம் 650 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





