ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் எதிர்கால சவால்களையும் கருத்தில் கொண்டு முக்கியமான அரசியல் கருத்தை முன்வைத்துள்ளார்.
அவர் தனது உரையில், தனித்தனியாகவும் பிரிந்து செயல்படும் அரசியல் அணுகுமுறைகள் தற்போதைய காலத்தில் பயனளிக்காது என்றும், அனைத்து அரசியல் சக்திகளும் கட்சி வேறுபாடுகளை தாண்டி ஒன்றிணைந்து ஒருமித்த பலமாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
நாட்டின் நிலைத்தன்மை, ஜனநாயக நடைமுறை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பாதுகாக்க, அரசியல் தரப்புகள் இடையே உரையாடலும் ஒத்துழைப்பும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்வதற்கு ஒருமித்த தேசிய அணுகுமுறை அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.தே.க. உள்ளக மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால தலைமைத்துவம் குறித்த விவாதங்களும் இக்கூட்டத்தில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்திர சிகிச்சைக்குப்பின் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில், எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு முயற்சிகளுக்கு ஒரு முக்கிய அரசியல் சைகையாக பார்க்கப்படுகிறது.






