இலங்கை உயர் நீதிமன்றத்தின் 10 நீதியரசர்களுக்கான விசேட செயற்திட்டம்!

இலங்கை உயர் நீதிமன்றத்தின் 10 நீதியரசர்களுக்கான விசேட செயற்திட்டம் ஒன்று டிசம்பர் 8 முதல் 12 வரை நடைபெற்றது.

இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை கழகம் (NJA) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட செயற்திட்டத்தில் அறிவுப் பரிமாற்ற மற்றும் கலந்துரையாடல் ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன இந்த செயற்திட்டத்தில் தலைமை தாங்கியிருந்தார்.

இந்த செயற்திட்டம் குறித்த மீளாய்வு மற்றும் அனுபவப் பகிர்வு சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (18) இலங்கை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, நீதியரசர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2025 ஏப்ரலில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைத் தொழில் வல்லுநர்களுக்காக ஆண்டுதோறும் 700 மேலதிக பயிற்சி இடங்களை வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன் ஒரு அங்கமாகவே நீதியரசர்களுக்காக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.