கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் உயிருடன் மீட்பு!

திக்வெல்ல – ஹிரிகெட்டிய கடலில் நீராடச் சென்று, கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது கடற்கரையில் பணியில் இருந்த திக்வெல்ல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் குறித்த நபர் மீட்கப்பட்டு அடிப்படை முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் திக்வெல்ல – வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.