கெத்ஹேனவிலிருந்து களுத்துறை வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட கோளாறினால் களுத்துறையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
வஸ்கடுவ, மொல்லிகொட, மொரோந்துடுவை, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, நாகொடை, கட்டுகுருந்த மற்றும் போம்புவல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.





