குச்சவெளியில் டெங்கு சிரமதானப் பணிகள்

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை மற்றும் பொதுமக்கள் இணைந்து க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் குச்சவெளி அந்நூரியா பாடசாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு சிரமதானப் பணிகளில் இன்று (27) ஈடுபட்டனர்.

தேசிய டெங்கு நோய் வாரத்தை முன்னிட்டு இந்த சிரமதானப் பணிகள் நடைபெற்றன.

இதில் குச்சவெளி பிரதேச பொதுமக்கள், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிளாஸ்டிக் பாவனை பொருட்களும் டெங்கு குடம்பிகள் பரவும் இடங்களும் இதன்போது அழிக்கப்பட்டன.