கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி ஊர்காவற்துறையில் கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ் வேலணை அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவனுக்கு நீதி கோரி செவ்வாய்க்கிழமை (10.03.2026) முற்பகல்-11 மணியளவில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மனித உரிமை ஆர்வலர்களின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.