கோப்பாய் ஆசிரியர் கலாசாலைச் சமூகத்தினரின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு புதன்கிழமை (11.03.2026) காலை மேற்படி கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் பதில் முதல்வர் கலாதேவி பொன்னம்பலம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு ‘ கலாசாலையும் பெண்கல்விப் பாரம்பரியமும்’ எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். விருந்தினர் அறிமுக உரையைக் கலாசாலையின் பிரதி முதல்வர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் வழங்கினார். சர்வதேச மகளிர் தினம் தொடர்பில் ஐக்கியநாடுகள் சபையால் வெளியிடப்பட்ட கொள்கைகள் ஆவணக் காணொளியாகக் காட்சிப்படுத்தப்பட்டன






