சீரான எரிபொருள் விநியோகம்: யாழ். மாவட்டப் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்

சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பில் யாழ். மாவட்டப் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (24.03.2026) காலை-09.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலர் அலுவலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரச அதிபர் கை.சிவகரன், மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) பா.ஜெயகரன், உதவி மாவட்ட அரச அதிபர் செல்வி.உ.தர்சினி, பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.