காலி வீதியின் இந்துருவ, அதுருவெல்ல பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை நபரொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஹோட்டலில் சமையல்காரராகப் பணியாற்றிய 21 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சடலம் தற்போது பலபிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



