செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் நாளை புதன்கிழமை (15.07.2026) காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின்  மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 32 நாட்கள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மாதம்- 23 ஆம் திகதியுடன் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.