நாட்டில் தற்போது சாதாரண நுகர்வு மட்டத்தின் அடிப்படையில், கையிருப்பிலுள்ள எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, 92 ரக பெட்ரோல் ஏப்ரல் 23 ஆம் திகதி வரையும், 95 ரக பெட்ரோல் மே 10 ஆம் திகதி வரையும், டீசல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரையும், சூப்பர் டீசல் மே 10 ஆம் திகதி வரையும் கையிருப்பில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.




