நிலக்கரி கொள்வனவு மோசடிக்கு காரணமான வலுசக்தி அமைச்சரை ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடடால், அரசாங்கம் என்றவகையில் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் இதன் பொறுப்பை கூட்டாக ஏற்றுக்கொள்வதாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள மோசடி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவந்தமையாமல் இதுவரை இலங்கை மின்சாரசபைக்கு 7.6 பில்லியன ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரசபை தெரிவித்திருக்கிறது.
நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான விலைமனுக்கோரளின் பரிந்துரைகள், நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிகளை மிகவும் திட்டமிட்டு மாற்றியமைத்து, அரசாங்கம் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது. நலக்கரி தொடர்பில் எந்தவித அனுபவமும் இல்லாத நிறுவனத்துக்கே அரசாங்கம் இதனை வழங்கி இருக்கிறது.
தற்போது இந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் இருக்கும் பிரதான நிபந்தனைகளை மீறி இருக்கிறது.இவ்வாறு நிபந்தனைகளை மீறி இருக்கும்போது, அரசாங்கததுக்கு அந்த விலை மனுக்கோரலை ரத்துச்செயலாம். ஆனால் அரசாங்கம் எந்வகையிலும் அதனை ரத்துச்செய்யாமல் தொடர்ச்சியாக அந்த நிறுவனத்தில் இருந்தே நிலக்கரியை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதை காணக்கூடியதக இருக்கிறது.
நிலக்கரி மோசடி தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணைை ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.இந்த முறைப்பாடுகள் தொடர்பில் மிக விரைவாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவிக்கிறோம். அத்துடன் இந்த மோசடிகளுடன் தொடர்புடைய வலுசக்தி அமைச்சரை ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். அவ்வாறு ஜனாதிபதி இந்த அமைச்சரவை நீக்காவிட்டால், அரசாங்கம் இந்த மோசடியை மறைப்பதற்கே முயற்சிக்கிறது.
ஆனால் அரசாங்கம் என்னதான் இந்த மோசடியை மறைப்பதற்கு முயற்சித்தாலும், அது இரப்பர் பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமிழ்த்த முயற்சித்தாலும் அது மீண்டும் மிதப்பதுபோன்று. இந்த நிலக்கரி மோசடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.
ஏனெனில் இதுவரை 9 நிலக்கரி அடங்கிய கப்பல்கள் வந்துள்ளன. அந்த ஒன்பதிலும் தரம்குறைந்த நிலக்கரி இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்ற பாரிய மோசடியாகும். அதற்கு அடுத்தபடியாக கொள்கலன் மோசடி இருக்கிறது. இவ்வாறு பல மோசடிகள் தற்போது வெளிப்பட்டு வருகின்றன.
அதனால் ஜனாதிபதி வலுசக்தி அமைச்சரை பதவி விலகுமாறு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடடால், அரசாங்கம் என்றவகையில் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் இதன் பொறுப்பை கூட்டாக ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
அத்துடன் அனைத்து விடயங்களையும் வெளிப்படையாக மேற்கொள்வதாக தெரிவித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் எந்த வெளிப்படை தன்மையும் இல்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் எதனையும் வழங்குவதில்லை. அதேநேரம் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு தேவையான ஒதுக்கீடுகள், மனித வளங்கள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்காமல் அதனை செயலிழக்கச்செய்ய அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.
அதேநேரம் அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தால் நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள நட்டத்தை, நூற்றுக்கு 13வீத மின்சார கட்டணத்தை அதிகரித்து, அதனை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவே எமக்கு தோன்றுகிறது என்றார்.




