பண்டாரவளை – லியங்கஹவெல, மாப்பிட்டிய பகுதியில் உள்ள கற்குவாரியில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் பாறைகளுக்கு அடியில் சிக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளை – பூனாகலை வீதியில் 16-17 கிலோமீற்றர் தூண்களுக்கு இடையில் இந்த கல்குவாரி அமைந்துள்ளது.





