புளியங்குளத்தில் தொடருந்து மோதி ஒருவர் பலி!

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (31) இரவில் காங்கேசன்துறையிலிருந்து மொறட்டுவை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.