மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர்!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும், எஸ். சந்துரு பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விசேட சந்திப்பு நேற்று (03.03.2026) நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியம் தலைவர் எஸ். சந்துரு பெர்னாண்டோ, மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்து, ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் உடன் கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, நல்லெண்ண விஜயத்தின் ஒரு பகுதியாக, மன்னார் மாவட்டத்தின் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.