மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன்கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.