யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச வயல் வெளியில் துருசில் துங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.





