வடமராட்சியில் அன்னை பூபதியின் ஊர்திப் பவனி

தியாகத் தாய். அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு சுமந்த ஊர்திப் பவனி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் மூன்றாவது நாளான இன்று சனிக்கிழமை (11.04.2026) யாழ் வடமராட்சியின் பல பகுதிகளையும் அன்னைபூபதியின் ஊர்திப் பவனி வலம் வந்தது. இதன்போது ஏராளமான பொதுமக்கள் நேரடியாகப் பங்கேற்று உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர்.