வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி குறித்த மயானப் பகுதியில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். எனினும், நீண்ட நாட்களாகியும் அவர் குறித்த எவ்வித அடையாளங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை.
உயிரிழந்த நபர் சுமார் 5 அடி 6 அங்குல உயரமுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் அல்லது புகைப்பட அடையாளங்கள் தெரிந்திருப்பின், உடனடியாகக் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு ஈரப்பெரியகுளம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:
ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071-8591344
பொலிஸ் நிலைய அவசர அழைப்பு: 024-2223532
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





