அரசியலை விட்டு விலகினார் ராமதாஸ்: பாமகவை அன்புமணியே பார்த்துக் கொள்வார் என விளக்கம்

அரசி​யல் துறவறம் மேற்​கொண்​டிருப்​ப​தாக​ பாமக நிறு​வனர் ராம​தாஸ் அறி​வித்தார்.

பாமக​வில் தந்​தைக்​கும் மகனுக்​கும் அதி​காரப்​போட்டி நடந்​து​வந்த நிலை​யில் கட்​சியே இரு அணி​களாக பிரிந்​திருந்​தன. இந்​நிலை​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு தைலாபுரத்​தில் ராம​தாஸ் – சரஸ்​வ​தி​யின் 61-வது திருமண நாளில் குடும்​பத்​துடன் வந்து பெற்​றோரிடம் ஆசி பெற்​றார். இதன்​மூலம் கோஷ்டி அரசி​யல் முடிவுக்கு வந்​தது.

இந்​நிலை​யில் திண்​டிவனம் அடுத்த கோனேரிக்​குப்​பத்​தில் உள்ள கல்வி நிலை​யத்​தில் தனது 88-வது பிறந்த நாளை ராம​தாஸ் நேற்று கொண்​டாடி​னார். ராம​தாஸும், அன்​புமணி​யும் ஓராண்​டுக்கு பிறகு ஓரே மேடை​யில் அமர்ந்​திருந்​தனர். மரக்​கன்​றுகளை நட்டு வைத்து ராம​தாஸ் பேசி​ய​தாவது: உங்​களுக்கு நல்ல செய்​தியை சொல்​கிறேன். நான் அரசி​யல் பேச மாட்​டேன்.

அரசி​யலுக்கு வழி​காட்ட மாட்​டேன். என்னை சந்​திக்க வருபவர்​களை பார்ப்​பேன், நலம் விசா​ரிப்​பேன், அவ்​வளவு​தான். அரசி​யலில் தலை​யிட​மாட்​டேன். அரசி​யலை அன்​புமணி பார்த்​துக்​கொள்​வார். அவரது மனை​வி​யும், நாங்​களும் துணை​யாக இருப்​போம். என்னை பார்க்க வருபவர்​கள் என்னை பார்த்​து​விட்​டு, அய்யா நலமா என விசாரித்துச் செல்​லலாம்.

அரசி​யல் பேசுவதற்கு ஏது​மில்​லை. இன்று (நேற்​று) முதல் அரசி​யல் துறவறம் மேற்​கொண்​டிருக்​கிறேன். இந்த கல்விக் கோயில் மேலும் சிறப்​பாக செயல்பட பாடுபட வேண்​டும். இதுவே எனக்கு நீங்​கள் செய்​கின்ற காணிக்​கை​யாக கருதுகிறேன். உங்​களு​டன் நீண்ட நேரம் பேச ஆசை இருந்​தா​லும், தலை சுற்​றல் வியா​தி, இப்​போதும் எட்டிபார்க்​கிறது. ஆனாலும் உங்​களை பார்க்க வேண்​டும் என ஆவலுடன் வந்​துள்​ளேன். என்னை வாழ்த்​தும் உங்​களது நல்ல உள்​ளம், எனக்​கும் உங்​களுக்​கும் இருக்​கும் உறவு எப்​போதும் மாறாது. இவ்​வாறு பேசி​னார்.

அரசி​யல் துறவறம் பூணுகிறேன் என ராம​தாஸ் கூறிய​போது, எவ்​வித​மான உணர்​வு​களை வெளிப்​படுத்​தாமல் மேடை​யில் அன்​புமணி அமை​தி​யாக காணப்​பட்​டார்.

அவரது உடல்​மொழி மூல​மாக ராம​தாஸின் அரசி​யல் ஓய்வு அறி​விப்பு என்​பது குடும்​பத்​தினருடன் ஏற்​கெனவே கலந்து பேசி திட்​ட​மிட்​டு, நிதான​மாக எடுக்​கப்​பட்ட முடி​வாக பார்க்​கப்​படு​கிறது. 47 ஆண்​டு​கள் பயணம், 96 ஆயிரம் கிராமங்​களுக்கு சென்று வந்த பாதங்​கள் என அடிக்​கடி கூறிய ராம​தாஸின் அரசி​யல் அத்​தி​யா​யம் என்​பது நிறைவு பெற்​ற​தாக அவரது கட்சி வட்​டாரங்​கள் தெரி​விக்​கின்​றன.