எஸ்ஐ தேர்வு முடிவை திரும்ப பெற்றது ஏன்?

 எஸ்ஐ தேர்வு முடிவு திரும்பப் பெறப்பட்டது குறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர் வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் டிச.21-ல் தேர்வு நடத்தியது.

இந்தத் தேர்வில் பிரிவு ஏ-வில் தமிழ் பகுதி தேர்வுவினாக்கள் இடம் பெற்றிருந்த நிலையில், பிரிவு பி பகுதியில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இடம் பெறவில்லை.

அதற்குப் பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் பலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உள்ளது.