மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற அரசின் வருவாயை பெருக்க வேண்டும்

‘மக்கள் நலத்​திட்​டங்​களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வரு​வாய்​களை பெருக்​கு​வதுடன், பொருளா​தார வளர்ச்​சியை தக்க வைக்க வேண்​டும்’ என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்​தி​யுள்​ளார்.

‘டிஎன்​பிஎஸ்​சி, ஆசிரியர் தேர்வு வாரி​யம் மற்​றும் மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூலம் அரசு பணிக்​கும் ஆசிரியர் பணிக்​கும் தேர்​வுசெய்​யப்​பட்​டுள்ள 9,801 பேருக்கு பணிநிய மன ஆணை வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பணிநியமன ஆணை​களை வழங்கி முதல்வர் பேசி​ய​தாவது: பல தடைகளை, சூழ்ச்​சிகளை முறியடித்து 1. 31 கோடி சகோ​தரி​களுக்கு சிறப்பு தொகுப்​பாக ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

அனை​வருக்​கு​மான முதல்​வ​ராக இருந்து தமிழகத்தை தொடர்ந்து நம்​பர் ஒன் மாநில​மாக உயர்த்​தும் பொறுப்​புணர்வு கூடி​யிருக்​கிறது. நமது நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கே எடுத்​துக்​காட்​டாக இருக்க வேண்​டும்.

மக்​கள் நலத்​திட்​டங்​களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வரு​வாய்​களை பெருக்க வேண்​டும். பொருளா​தார வளர்ச்​சியை தக்க வைக்க வேண்​டும். திரா​விட இயக்​கத்​தின் எழுச்​சி​யால் படிப்பை இறுகப்​பிடித்து இளைஞர்​கள் முன்​னேறி​யுள்​ளனர்.

உங்​கள் கையில் இருக்​கின்ற பணிநியமன ஆணை என்​பது, உங்​கள் உழைப்​புக்​கான அங்​கீ​காரம் மட்​டுமல்ல, எதிர்​காலத்​துக்​கான உத்​தர​வாதம். ஒரு கிராம நிர்​வாக அலு​வலர் சரி​யாக பணி​யாற்​றி​னால், அந்த கிராமமே மாற்​றத்​தைக் காணும். ஒரு ஆசிரியர் ஒழுங்​காக பணி​யாற்​றி​னால், அறி​வார்ந்த – ஒழுக்​கம் மிகுந்த தலை​முறை உரு​வாகும், ஒரு மருத்​து​வர் கடமை​யுணர்​வுடன் பணி​யாற்​றும்​போது, ஒரு உயிர்காப்​பாற்​றப்​பட்​டு, அவர்​கள் குடும்​பமே மகிழ்ச்​சிக்​குள்​ளாகிறது.