ஈரானின் கெர்மான்ஷா மாகாணத்தில், குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் மெஹர் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு ஊடகங்கள் இதைத் தெரிவித்துள்ளன.
இந்தத் தொடர் தாக்குதல்கள், இராணுவ இலக்குகளிலிருந்து விலகி, சாதாரண மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்துள்ளன.
உயிரிழந்த 13 பேரில், ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட இரண்டு சிறு குழந்தைகளும் நான்கு பெண்களும் அடங்குவதாக மெஹர் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.





