அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான சண்டையில் ஈரான் வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள், பொது இடங்கள், விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக துபாய் விமான நிலையம் தாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் வளைகுடா நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டார்.
ஈரான் மீது அங்கிருந்து தாக்குதல் நடத்தப்படாத வரை நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் ஈரான் அதிபர் மன்னிப்பு கேட்டது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-தாக்குதலுக்கு உள்ளாகி தோற்கடிக்கப்பட்ட ஈரான், மன்னிப்பு கேட்டு அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது. மேலும் இனி அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோன் என்று உறுதியளித்துள்ளது.
இந்த வாக்குறுதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலின் காரணமாக மட்டுமே ஈரானால் அளிக்கப்பட்டுள்ளது.ஈரான் மத்திய கிழக்கைக் கைப்பற்றி ஆட்சி செய்ய விரும்புகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஈரான், சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளிடம் தோற்றது இதுவே முதல் முறை. ஈரானின் மன்னிப்புக்குப் பிறகு, மத்திய கிழக்கு நாடுகள் நன்றி ஜனாதிபதி டிரம்ப் என்று கூறியுள்ளனர். அதற்கு உங்களை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளேன்.சனிக்கிழமை (அமெரிக்கா நேரப்படி) ஈரான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஈரானின் மோசமான நடத்தை காரணமாக இதுவரை இலக்காக இல்லாத பகுதிகள் தாக்கப்படும்.இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், ஒருபோதும் சரணடையமாட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.





