ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இஸ்ரேல் தீவிரம்

ஈ​ரான் மீது மிகப் பெரிய அளவில் தாக்​குதல் நடத்த அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

ஈரானில் அடக்​கு​முறை​களுக்கு எதி​ராக போராட்டம் நடத்திய மக்கள் மீது அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயி​ரிழந்​தனர். பொது​மக்​களை கொல்வதை நிறுத்​தா​விட்​டால், ஈரான் மீது தாக்​குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்​கெனவே எச்சரிக்கை விடுத்​திருந்​தார்.

இதற்​கிடை​யில், அமெரிக்கா – ஈரான் இடையே ஜெனி​வா​வில் நடைபெற்ற அணு ஆயுத ஒழிப்பு பேச்​சு​வார்த்தை பலன் அளிக்கவில்லை என்​றால், ஈரான் மீது மிகப் பெரிய தாக்​குதல் நடத்த அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வ​தாக தகவல்கள் தெரிவிக்​கின்​றன.

ஈரான் அருகே யுஎஸ்​எஸ் ஆபிர​காம் லிங்​கன் விமானம் தாங்கி போர்க்​கப்​பல் தனது துணைப் போர்க் கப்​பல்​களு​டன் தயார் நிலை​யில் உள்​ளது. இந்​நிலை​யில் யுஎஸ்​எஸ் ஜெரால்ட் ஆர்ஃபோர்ட் போர்க் கப்​பலும் மத்​திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்​டுள்​ளது.

மேலும், அமெரிக்கா போர்த் தளவாடங்​களை மத்​திய கிழக்கு பகுதி​யில் குவித்​துள்​ளது. இது மிகப் பெரிய தாக்​குதலுக்கு அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வது போல் தெரி​கிறது. இந்த தாக்​குதல் சில வாரங்​கள்​ தொடரலாம்​ எனவும்​ கூறப்படுகிறது.