உயர்தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் உயர்தர மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.

நேற்று (07) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இணையவழி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இவ்வருட இறுதியில் நடத்தப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.