சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடாகப் பாரவூர்திகள் பயணிக்க வேண்டாமென அறிவுறுத்து!

சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக் காரணமாக குறித்த பாலத்தினுடாகப் பாரவூர்திகள் (டிப்பர், லொறி, கொள்கலன் ஊர்திகள்) செல்வது மிகவும் ஆபத்தினை ஏற்படுத்துமென வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மறு அறிவித்தல் வரும் வரை குறித்த பாலத்தினுடாகப் பாரவூர்திகள் போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாமென வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.