நீர்கொழும்பில் துப்பாக்கி, தோட்டாக்கள், ஹெரோயினுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு, 20 ஆவது மைல்கல் பிரதேசத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின்  போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று திங்கட்கிழமை (07) இரவு  நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் ஜா – எல பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி, 4 தோட்டாக்கள் மற்றும் 09 கிராம் 715 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.