களுத்துறை – மத்துகம வீதியில் கொஸ்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (23) காலை 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்தை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது முன்னால் பயணித்த சொகுசு பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.