மஹர சிறைச்சாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அவசர தலையீடு கோரி மனு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களில் பல கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், காயமடைந்த கைதிகளுக்கு உதவ முயற்சிப்பவர்களை சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மூலம் தடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சம்பவத்தை நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய உடனடியாக விசாரணைக் குழுவொன்றை மஹர சிறைச்சாலைக்கு அனுப்புமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.