இரத்மலானை பொருபனை எஹொடஹேனை ஸ்ரீ விசுத்தாராம விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை மற்றும் போதி மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர, கட்சியின் உப தலைவர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் போது நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீரவும் சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






