மாத்தறை சிறைச்சாலையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதால் அதனை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மாத்தறை சிறைச்சாலையில் இருந்த 3 கைதிகளை வேறு சிறைக்கு இடமாற்றம் செய்ய முற்பட்ட நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து மாத்தறை சிறைச்சாலையின் வெளிப்புறப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது குழப்பநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.