மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய உப்போடை களப்புப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (07) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் 34 மற்றும் 56 வயதுடைய மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் களப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.