யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சனிக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.

ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய  இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.