யாழ்.மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஆர்.என்.கே. அழககோன் இன்று வியாழக்கிழமை (06.08.2026) காலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை காலமும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ரி.என்.சூரியராஜா மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளராகக் கடமையேற்கவுள்ளார்.




