ரிஷாத்துக்கு எதிரான தீர்ப்பை இடைநிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

வில்பத்துக்கு அருகில் காடுகள் வெட்டப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நடுவது  தொடர்பில்  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு  உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (02)  இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிஷாத்  பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு அனுமதியளித்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி,  இந்த மனுவை பெப்ரவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம்   உத்தரவிட்டுள்ளது.