மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கமைய, எதிர்வரும் மே 30-ஆம் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாகவும், மே 27 முதல் ஜூன் 2 வரை ‘வெசாக் வாரமாகவும்’ அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாளான மே 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறை தினமாக இருக்கும். மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கமைய, எதிர்வரும் மே 30-ஆம் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாகவும்,? மே 27 முதல் ஜூன் 2 வரை ‘வெசாக் வாரமாகவும்’ அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்படும் என்றார்.





