9 தமிழக மீனவர்கள்கைது !

சிறிலங்கா கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் திங்கட்கிழமை (24) இரவு தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிறிலங்கா  கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 தமிழக மீனவர்களையும் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்துச்சென்ற கடற்படையினர் விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.