அவுஸ்திரேலியாவில் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

அவுஸ்திரேலியாவில் யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் புதன்கிழமை (15.01.2025) பிற்பகல் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துள்ளார்.

மேற்படி பெண் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். இந் நிலையில் நேற்றுப் பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவத்தில் வாசவன் உஷா (வயது- 54) என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.