இந்த நாட்டில் அனைவரும் சமத்துவமாக அங்கீகரிக்க படுவார்கள் – கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார்

எமது அரசாங்கத்தின் இலக்கு அனைவரும் இந்த நாட்டில் சமத்துவமாக அங்கீகரிக்க படுவார்கள் என்று கொழும்பு  மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.

கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்று வரும்  மலையக கல்வி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மலையகம் உட்பட நாட்டை மீளக்கட்டியெழுப்ப அனைவரும்  ஒன்றிணையவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.