வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா இன்று புதன்கிழமை (15.07.2026) மாலை-05.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொடிக்கு விசேட பூஜை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டுத் தொடர்ந்து கொடிச் சீலை ஆலய வளாகத்திலுள்ள பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்து, பெளத்த, இஸ்லாம், கிறிஸ்தவ சமயத் தலைவர்களின் ஆசி உரைகளைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகராக் கோச முழக்கங்களுக்கு மத்தியில் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. பல ஆயிரகக்கணக்கான அடியவர்கள் கொடியேற்றத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.






