காத்தான்குடியில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து இளைஞர் உயிரிழப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.