சுரேஷ் சலேவின் உடல்நிலை உடல்நிலை கவலைக்கிடம்! -மனைவி மனோரி சலே

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிக்கும் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது என அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இரத்த உறைவு காரணமாக அவரது கை கடுமையாக வீங்கியிருப்பதாகவும், இதன் காரணமாக அவரது உடலின் மேற்பகுதி சரியாகச் செயல்படாததால் அவர் முற்றிலும் படுக்கையிலேயே முடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த இரத்த உறைதல் நிலையைக் கட்டுப்படுத்த, மருத்துவர்கள் அவரது வயிற்றுப் பகுதியில் சிறப்பு ஊசிகளைச் செலுத்தியுள்ளார்கள்.

நோய்க்கான சரியான காரணம் இன்னும் வெளிப்படவில்லை என்றும், இது குறித்து விசாரிக்க ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் மனோரி  சலே ஊடகங்களிடம் மேலும் தெரிவித்தார்.