இந்தியாவில் நடைபெறும் தெற்காசியப் பெண்கள் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்துக்காகப் பங்குபற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்ட அணியில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவிகள் இருவரும், தற்போது கற்றுக் கொண்டிருக்கும் மாணவிகள் இருவருமென நால்வர் தெரிவாகியுள்ளனர்.
பா.சானு (பழைய மாணவி), சி.தர்மிகா (பழைய மாணவி), லயன்சிகா (மாணவி), யோ.உமாசங்கவி (மாணவி) ஆகியோரே இவ்வாறு தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளனர்.






