மன்னார் வடகடல் மற்றும் நடுக்கடல் கரையோரப் பகுதிகளில் கடற்படையினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 830 கிலோ கிராமுக்கும் அதிகளவான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல்களான தம்மென்னா மற்றும் கஜபாவால் நடத்தப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 12 சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதன்போதே, கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.



