முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, இன்று (22) புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் துப்பாக்கியால் ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை  (21) பிரேமலால் ஜயசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.