யாழ்.மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்டத் துணை ஆயர் பேரருட்தந்தை. அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் திருத்தந்தை 14 ஆம் லியோவால் திங்கட்கிழமை (29.06.2026) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.மறை மாவட்டப் பேரருட்தந்தையாகக் கடமையாற்றிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஓய்வுபெற்றுச் செல்வதையடுத்துக் கொழும்பு உயர் மறைமாவட்டத் துணை ஆயராகப் பணியாற்றி வந்த இவர் யாழ்.மறைமாவட்டப் புதிய ஆயராகத் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.






